search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கு சேகரிப்பு"

    • தமிழ்நாட்டி பெற்ற ஊழல் பணத்தை எல்லாம் வெளிநாட்டில் முதலீடு செய்தார்கள். பேங்க் திறந்து இருக்கிறார்கள். இதுதான் இன்று தமிழ்நாட்டின் நிலைமை.
    • திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்து வீட்டு வரி, பால் விலை, மின்சார கட்டணம், பத்திர பதிவு ஆகிய அனைத்தையும் உயர்த்தி உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தர் பேருந்து நிலையம், அரணாரை, சங்கு பேட்டை, துறைமங்கலம், பழைய பேருந்து நிலையம், ராஜா திரையரங்கம், வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019த்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    குறிப்பாக இந்த பகுதியில் பள்ளிகளில் 42 வகுப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறேன். அதேபோல் கழிவறைகள், சுற்றுசுவர் அமைத்து கொடுத்திருக்கேன். கடந்த முறை மத்திய அரசிடம் இருந்து என்ன நிதி பெறுகிறோம் என்றும் அதை எப்படி செலவிடுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளோம். இதுவரை மூன்று மேம்பாலங்கள் கட்டிகொடுத்திருக்கிறோம். 9 தரைப்பாளங்களை கட்டிக்கொடுத்திருக்கிறோம். சிறுகனூரில் மேம்பாலம், தரைப்பாலம், ரேஷன் கடை போன்றவற்றை அமைத்து கொடுத்திருக்கிறேன்.

    இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம். ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்தும், எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை அளித்துள்ளோம். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகாளாக ஆகியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 108 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    கடந்த 10 வருடங்களாக மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மோடி தலைமையிலான 70 மந்திரிகள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் இங்கு அப்படியில்லை. ஊழல் செய்து வழங்கில் உள்ளார்கள் எப்படி தப்பிப்பார் என்றும் தெரியவில்லை. ஆகவே இந்தியாவிற்கு நல்ல ஆட்சி கொடுத்து, உலக நாடுகள் அனைத்து வியந்து பார்த்த அந்த மாமனிதரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு 10 ஆண்டுகள் முதலமைச்சாராக இருந்தார். குஜராத்தில் நல்ல ஆட்சி கொடுத்திருக்கிறார். இந்த 23 வருடங்களில் அப்பழுக்கற்றவராக இருக்கிறார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் 1500 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் வீதம் மருத்துவ காப்பீடு வசதி செய்து தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். மருத்துவ உதவி என்றால் சாதாரண மருத்துவம் அல்ல உயர்தர சிகிச்சை செய்து தருகிறேன்.

    வருகிற வெள்ளிகிழமை யாருக்கு வாக்களிப்பது என்று குழப்பத்தில் இருப்பீர்கள். 50 ஆண்டுகலமாக தமிழ்நாட்டை ஆளவிட்டீர்கள், உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட்டுக் கொண்டே இருந்தீர்கள். அவர்களும் வாழ்ந்தார்கள் உயர்ந்தார்கள். குடும்பம் வாழ்ந்தது சொத்து சேர்த்தார்கள். தமிழ்நாட்டி பெற்ற ஊழல் பணத்தை எல்லாம் வெளிநாட்டில் முதலீடு செய்தார்கள். பேங்க் திறந்து இருக்கிறார்கள். இதுதான் இன்று தமிழ்நாட்டின் நிலைமை.

    இங்கு உள்ள ஏழைகள், விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து இன்றைக்கு வரி கட்டுகிறார்கள். டாடா, பிர்லா மட்டும் வரி கட்டவில்லை. ஏழைகளான மக்களும் அனைத்து பொருட்களுக்கும் வரி கட்டுகிறோம். பாவப்பட்ட மக்கள் அளிக்கும் இந்த வரி பணத்தை திராவிட முன்னேற்றகழக அரசும், முதலமைச்சர் முதற்கொண்டு அமைச்சர்களும் ஊழல் செய்து கொள்ளையடித்து வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். 50 ஆண்டுகள் இந்த திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்து வீட்டு வரி, பால் விலை, மின்சார கட்டணம், பத்திர பதிவு ஆகிய அனைத்தையும் உயர்த்தி உள்ளனர்.

    ஆகவே மோடியின் கரங்களை வலுப்படுத்துவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமை ஆகவே தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை.
    • அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி, தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர், தேனி பெரியகுளத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

    இந்நிலையில், தேனி உழவர் சந்தை, பாரஸ்ட் ரோட்டில் நடைபயணம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வாக்கு சேகரித்தார்.

    இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியகுளம் சாலையில் உள்ள என்.ஆர்.டி. ரோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையோர கடைகளிலும், நடந்து சென்ற பொதுமக்களிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார்.

    பின்னர் உழவர் சந்தைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    சாலையோர வியாபாரிகள் கைகுலுக்கி வரவேற்பு தெரிவித்தனர். அவர்களிடம் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடமும் மகளிர் உரிமைத் தொகை முறையாக கிடைக்கிறதா? என்று விசாரித்தார்.

    அதற்கு பெண்கள் தங்களுக்கு உரிமைத்தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும், இதனால் தங்கள் குடும்ப செலவுக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர்.

    அதன் பின் சாலையோரம் இருந்த ஒரு தேனீர் கடையில் அமர்ந்து எளிமையான முறையில் தேனீர் குடித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த எளிமையான பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. முதல்-அமைச்சருடன் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

    • கள் இறக்கும் தொழிலாளரிடம் உங்களுக்கு என்ன தேவையாக உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
    • கம்மம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து பி.ஆர்.எஸ்.கட்சி சார்பில் நாம நாகேஸ்வர ராவ் போட்டியிடுகிறார்.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கள்ளுகடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பனை மற்றும் தென்னை மரங்களில்கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்களிடம் வேட்பாளர்கள் நேரடியாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தந்த்ரா வினோத் ராவ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் அந்த தொகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது கள் இறக்கும் பனைமர தொழிலாளி ஒருவர் பானை மற்றும் பனைமரம் ஏற பயன்படுத்தக்கூடிய உபகரணங்களுடன் வந்தார்.

    அவரிடம் இருந்து கள் பானையை வாங்கிய வேட்பாளர் அதனை கையில் ஏந்திய படி தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

    மேலும் கள் இறக்கும் தொழிலாளரிடம் உங்களுக்கு என்ன தேவையாக உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.

    கள்பானையுடன் வேட்பாளர் ஆதரவு கேட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கம்மம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து பி.ஆர்.எஸ்.கட்சி சார்பில் நாம நாகேஸ்வர ராவ் போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட வில்லை. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பா.ஜ.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்து டெல்லிக்கு அனுப்புனீர்கள்.
    • நீங்கள் அனுப்பிய உணர்வும், நியாயமும் வீண்போகவில்லை.

    இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில், நேற்று பொரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட கல்பாடி, சிறுவாச்சூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    வருகிற 19ம் தேதி பாராளுமன்ற தேர்தலில் உங்களின் பொண்ணான வாக்கை தாமரை சின்னத்திற்கு வாக்கு அளித்து வெற்றிப் பெற செய்ய வேண்டும்.

    கல்பாடி என்பது நெகிழ்ச்சி தரக்கூடிய கிராமமாக உள்ளது. அதேபோல, இங்கு கூடியிருக்கும் மக்களின் முகத்தில் உள்ள சிரிப்பை பார்க்கின்றபோது நம்பிக்கை பிறக்கிறது.

    நீங்கள் வேறு யாருக்கு வாக்குத்தர முடியும் என்று யோசித்து பாருங்கள். 2019ம் தேர்தலின்போது, பல ஊருக்கு சென்றிருக்கிறேன். உங்களை சந்தித்திருக்கிறேன். வாக்கு கேட்டிருக்கிறேன்.

    அப்போது, மக்கள் எனக்கு கொடுத்த வாக்கு என்ன தெரியுமா? 6,83,000 வாக்குகள். 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்து டெல்லிக்கு அனுப்புனீர்கள். டெல்லிக்கு சென்று எங்கள் ஊரின் நிலைமையை சொல்லி நிதி கொண்டு வர அனுப்புனீர்கள்.

    நீங்கள் அனுப்பிய உணர்வும், நியாயமும் வீண்போகவில்லை. மீண்டும் வந்திருக்கிறேன் என்றால் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் கேட்டதை செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்.

    அனைவரின் வீட்டிலும் புத்தகம் வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த புத்தகத்தில், எத்தனை முறை, எதற்காக எந்த அமைச்சரை சந்தித்து, பிரதமர் மோடியை சந்தித்து முதல் கொண்டு இதில் இடம்பெற்றிருக்கிறது.

    அதை படித்தால், பாராளுமன்ற உறுப்பினர் சரியாகதான் செய்துக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்.

    அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் இந்த நகரங்களை இணைக்கும் ரெயில் பாதை தேவை என 50 ஆண்டு காலமாக முயற்சி செய்துக் கொண்டீர்கள்.

    அதற்கான கோப்புகளை கொண்டு பிரதமரிடம் சென்றேன். உடனே ரெயில்வே அமைச்சரை அழைத்து விசாரித்தார். அதற்கு 1000 கோடி ஆகும் எனவும் அதில் முதலீடு செய்தால் லாபம் வராது என ரெயில்வே அமைச்சர் தெரிவித்தார்.

    மோடியின் உத்தரவை அடுத்து, 2024 முழு பட்ஜெட்டில் 1000 கோடி நிதி ஒதுக்கப்பட இருக்கிறார்கள். இது எனக்கும் மன நிறைவு.

    இதுபோன்று, மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
    • அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.

    மேட்டுப்பாளையம்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள், மான், சிறுத்தை, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×